கிறிஸ்துமஸ், புத்தாண்டு: உஷார் நிலையில் போலீஸ்
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சென்னையில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கபோலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடி போதையில் வாகனம் ஒட்டினாலோ, ஈவ் டீசிங் செய்தாலோ கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் காளிமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து நிருபர்களிடம் பேசினார்:
சென்னை நகரில் கம்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்துபவ
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னையில் பாதுகாப்புபலப்படுத்தப்படும். 24-ம் தேதி மாலையில் இருந்தே கிறிஸ்தவ ஆலயங்களுக்குபாதுகாப்பு போடப்படும்.
கிறிஸ்துமஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க 6000 போலீஸார்நியமிக்கப்படுவார்கள். இதே போல புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதிபத்தாயிரம் போலீஸார் சென்னையில் பாதுகாப்பு பணிகளை கவனிப்பார்கள்.பாதுகாப்பு முழுவிபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு சில புதிய நடைமுறைகளை கண்டிப்பாககடைபிடிக்க உள்ளோம். மோட்டார் சைக்கிள் போன்ற இரண்டு சக்கர வாகனஓட்டுனர்கள் குடி போதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
புத்தாண்டு வாழ்த்து என்ற போர்வையில் பெண்களை கிண்டல் செய்யக்கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு கேக் வெட்டுகிறோம் என்று சில நிறுவனங்கள் நடு ரோட்டில் கேக் வெட்டும்நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆண்டு நடு ரோட்டில் அதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.
புத்தாண்டையொட்டி மெரீனா பீச், எலியட்ஸ் பீச் போன்ற இடங்களில் கடலில்குளிப்பவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணிப்பார்கள். குதிரைப்படைபோலீஸார் இதற்காக பயன்படுத்தப்படுவார்கள்.
எலியட்ஸ் பீச் ரோடு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.மொத்தத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் அவர்.