ஜெ. வழக்கு: வாரத்திற்கு 3 முறை நடக்கும்
சென்னை:
ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கை தற்போதுஇருப்பது போல் வாரத்திற்கு 3 நாள் விசாரணை நடத்தலாம் என தனி நீதிமன்ற நீதிபதிஆறுமுகப் பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக ரூ 68 கோடி சொத்துசேர்த்ததாக அவர் மீது முதலாவது தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கின் சாட்சிகள் குறுக்குவிசாரணை தினமும் நடைபெற வேண்டும். நாள்ஒன்றுக்கு 10 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு அரசு தரப்பினர்மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது வக்கீல்கள் விவாதம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த விவாதத்திற்கு பின்அரசு தரப்பு வக்கீல்கள் வாரத்தில் 3 நாள் வழக்கை நடத்தலாம். அதே போல் முடிந்தால்நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றத்திடம்கூறினர்.
முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்த்ன் ஏற்கனவே நடந்துவருவது போல் வாரத்தில் 3 நாட்கள் விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.