For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதிக் கட்சிகள் வானவில் மாதிரி .. வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

சாதிக் கட்சிகள் என்பது மழை காலத்து வானவில் அல்லது காளான் போன்றது. அதுவரும், கூட்டம் போடும், ஆனால் நிலைக்காது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மதவெறி அபாயம், உள் ஒதுக்கீட்டில் மகளிருக்கு 33 சதவித இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரைகளை அமல் செய்வது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையைவலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கரூர் முதல் சென்னை வரை நடக்கும்விழிப்புணர்வு வெளிச்சக் கூட்டத்தின் தொடக்க விழா கரூரில் நடந்தது.

இதை துவக்கி வைக்க திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கரூர் வந்தார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், எல்லா சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும்என்பது அர்ச்சகர் பிரச்னை மட்டுமல்ல சாதி ஒழிப்பு பிரச்னையுமாகும்.

தந்தை பெரியாரின் கடைசி கால போர் இதற்காக நடந்தது. முதல்வர் கருணாநிதி கூடபெரியாரின் நெஞ்சில் இந்த பிரச்னையை முள்ளாக வைத்து அதை நீக்காமல் அவரைபுதைக்கிறோம் என கூறினார்.

இந்த பிரச்சனையை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்நடத்துகிறோம்.

இந்த போராட்டம் இந்து அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலகங்கள் முன்பும், அரசுஅலுவலகங்கள் முன்பும் நடைபெறும். அரசு இந்த பிரச்சனையில் அதிக அழுத்தம்காட்ட வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம்.

வங்கி ஊழியர் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். தனியாரை அனுமதிப்பதைநாங்கள் எதிர்க்கிறோம்,

சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற அணிக்கு ஆதரவளிப்போம். சாதிக்கட்சிகளைஒதுக்கி வைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளோம்.

சாதிக் கட்சிகள் என்பது மழை காலத்து வானவில் அல்லது காளான் போன்றது. அதுவரும், கூட்டம் போடும், ஆனால் நிலைக்காது.

பெரியார் பற்றி திரைப்படம் எடுத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.வரவாற்றை திரிக்காமல் வரலாறாகவே காட்ட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X