"3-வது அணியை மூப்பனார் தடுக்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தமிழகத்தில் 3-வது அணி உருவாவதை மூப்பனார் தடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தேனியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் டெல்லிசெல்லவுள்ளேன். அங்கு தேர்தல் ஆணையரை சந்தித்து 3 கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளேன்.

வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை பழங்குடி மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.

தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். வன்முறையைத் தூண்டி விடும் பாட்டாளி மக்கள் கட்சியை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 3 வது அணி உருவாக வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். ஜெயலலிதாவும், மூப்பனாரும் 3 வது அணி உருவாவதைத் தடுக்க வேண்டும்.வருகிற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம், அன்பு தேசம் ஆகிய கட்சிகள் இணையவேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இடம்பெறாது என்றார் திருநாவுக்கரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+