போலீஸ் வேடத்தில் வந்து ரூ. 60 ஆயிரம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
அரசு பஸ்சில் பயணம் செய்த பருப்பு வியாபாரியை, கொள்ளைக் கும்பல் ஒன்று போலீஸ் வேஷமிட்டுக் கடத்திச் சென்று ரூ. 60 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டுசென்றது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பருப்பு வியாபாரி வையாபுரி (32). இவர் மதுரையிலிருந்து கரூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது ஆலமரத்துப் பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பஸ்ஸை வழி மறித்தது. பஸ்சில் இரண்டு போலீசார் போன்று உடையணிந்த இருவர் ஏறினர். அவர்கள்பஸ்சில் சோதனையிட்டனர். வெடிகுண்டு சோதனை செய்வதாகக் கூறினர். பின்னர் வையாபுரியை கீழே ஒரு பையுடன் இறக்கினர்.
அதற்குப்பின் வையாபுரியிடமிருந்த ரூ. 60 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தலைமறைவாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசில் வையாபுரி புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications