மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இருமுடி திருவிழாவையொட்டி, தமிழகத்தில் 24 இடங்களிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விட தென்னக ரயில்வே தீர்மானித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி திருவிழா நடக்கிறது. இதையடுத்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விட தென்னக ரயில்வே முடிவுஎடுத்துள்ளது.

சிறப்பு ரயில்கள் குறித்த விவரம் வருமாறு:

நெல்லையிலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு மேல்மருவத்தூர் போய் சேரும். அதுபோல் அங்கிருந்து மாலை 5மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1.30 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து ஜனவரி 17, 19, 20, 22, 23, 25, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 3 மணிக்கு மேல்மருவத்தூர் போய்ச் சேரும். இந்த ரயில் மதுரையில் இருந்து டிசம்பர் 28,30ஜனவரி 2,29 தேதிகளில் இயக்கப்படுகிறது.

புதுக்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயில் மேல்மருவத்தூருக்கு அடுத்த நாள் காலை 3 மணிக்குப் போய்ச் சேரும். அதுபோல்அங்கிருந்து 5.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.25 மணிக்கு புதுக்கோட்டை வந்து சேரும்.

இந்த ரயில் புதுக்கோட்டையில் இருந்து ஜனவரி 20, 24, 27 தேதிகளில் இயக்கப்படுகிறது. கடலூர் - மேல்மருவத்தூருக்கு இடையே சிறப்பு ரயில்விடப்படுகிறது. இந்த ரயில் கடலூரிலிருந்து ஜனவரி 7 ம் தேதி காலை 7 மணிக்குப் புறப்பட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல்மருவத்தூர் போய்ச்சேரும்.

இதேபோல் பழனி, அறந்தாங்கி, சிவகாசி, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, தேனி, போடி நாயக்கனூர், விருதுநகர், ராஜபாளையம், சிதம்பரம்,கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்தும் மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+