வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் நகரில் உள்ள புகழ் பெற்ற ஏரி தூர்வாரப்பட்டு, மறுவாழ்வு பெற்றுள்ளநிலையில் அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரிய வகை பறவைகள் வரத் துவங்கியுள்ளன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குப் பெயர் போனது. உள்நாடு தவிர வெளிநாடுகளைச் சேர்ந்தஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து போவதுண்டு.
இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை முந்தையை ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது. இதுவரை மொத்தம்20,000 பறவைகள் வந்து சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் ஏரி தூர்வாரப்பட்டு, மறுவாழ்வுபெற்றதே இவ்வளவு பறவைகள் வந்து போனதற்குக் காரணம்.
மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த பறவைகள் வேடந்தாங்கல் வந்து செல்கின்றன.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,000 பறவைகள்தான் வந்து சென்றன. அடுத்த மாதம் பறவைகளின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரி 73 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications