சீன கிறிஸ்துமஸ் விழாவில் தீ: 309 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பீஜிங்:

சீனாவில் லூயாங்க் நகரிலுள்ள நடன அரங்கில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 309 பேர்கொல்லப்பட்டனர்.

தீ விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள லூயாங்கில் நடன அரங்கத்தின் 4 வது மாடியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்துஏற்பட்டது. இதையடுத்து 6 பேர் அங்குள்ள ஜன்னல் வழியே வெளியே குதித்துத் தப்பித்து விட்டனர்.

மேலும் 2 வது மற்றும் 3 வது மாடிகளில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளிகளும் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இந்தத் திடீர் தீ விபத்துக்குக்காரணம் என்ன என்று தெரியவில்லை. முதலில் மாடியின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அங்குமிங்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 7 மாடிக் கட்டிடமாகும். இங்கு வியாபார ஸ்தலங்கள், சிறு சிறு கடைகள், ஜவுளிக் கடைகள் மற்றும் இதர கடைகள்இயங்கி வருகின்றன.

1994 ம் ஆண்டும் இதே போல் சின்சியாங்கில் உள்ள கராமேயில் உள்ள அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் 323 பேர் கொல்லப்பட்டனர்.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+