For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்டை நிறுத்தம் குறித்து இலங்கை மறுபரிசீலனை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று தெரிகிறது.

அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஐரோப்பாவிலிருந்து திரும்பியதும் ஜனவரி மாதம் 3 ம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள்அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை அங்கீகரிப்பதா? வேண்டாமா? என்று குறித்து பரிசீலனை செய்யப்படும்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் தினம் முதல் ஒரு மாதத்திற்கு அதாவது ஜனவரி மாதம் வரை சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று விடுதலைப்புலிகள் கடந்தவாரம் அறிவித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

இந்நிலையில் சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகளின் சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அரசு, புலிகளின் சண்டைநிறுத்தத்தை நிராகரித்திருந்த போதிலும் விடுதலைப்புலிகள் கூறுகையில், அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் சண்டைநிறுத்தம்கடைபிடிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அதே நேரம் அரசு தெரிவிக்கையில், அரசு சண்டைநிறுத்தத்தை அறிவிக்கவோ அல்லது புலிகளால் அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவோ செய்யாது. ஏனெனில் பேச்சுவார்த்தை மட்டுமே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழி என்று தெரிவித்துள்ளது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கூறுகையில், புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இலங்கை அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு, புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யும்என்று தெரிகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X