கூட்டணி ஆட்சியே வரும்...மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். மூப்பனார் கட்சியின் தலைவராக மீண்டும்ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் த.மா.கா.கட்சின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு நன்றிதெரிவித்து அவர் பேசுகையில், இனிமேல் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும்.
இந்தியாவில் 15 மாநிலங்களில் கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழகத்தில் இனிமேலும் கூட்டணிஆட்சிதான் அமையும். ஜெயலலிதா கூறுவது போல் கூட்டணி ஆட்சி அமையாமல் இருக்க வாயப்பில்லை என்றார்மூப்பனார்.
முன்னதாக புதன்கிழமை காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மூப்பனார்கட்சியின் தலைவராக, ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். த.மா.கா.வை மூப்பனார் 1996 ம் ஆண்டுதொடங்கினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications