தாமரைக்கனியை கைது செய்ய தேவையில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாமரைக்கனி எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் பி.டி.ஆர்பழனிவேல்ராஜன் புதன்கிழமை அறிவித்தார்.

அவர் சென்னையில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தாமரைக்கனி எம்.எல்.ஏவுக்கு பதினைந்து நாள்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு பற்றி எனக்கு திருப்தி இல்லை. பதினைந்து நாள் என்பதுஅதிகம். அவர் ஏற்கனவே இரண்டு நாள் சிறையில் இருந்து இருக்கிறார்.

இப்பொழுது பிரச்சனை தண்டனையைப் பற்றியது அல்ல. சட்டசபையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும்என்பது தான் என்று குறிப்பிட்டவர், தாமரைக்கனியே என்னிடம் தொலைபேசியில் பேசினார். சரண் அடைந்துவிடவா? என்றும் கேட்டார். தேவையில்லை என்று நான் கூறினேன். மேலும் தனக்கு உடல்நலக்குறைவுஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேரப் போவதாகவும் என்னிடம் கூறினார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம்இல்லை. என்னுடைய அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கீட முடியாது. தாமரைக்கனி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்யலாமா? என்பது அவருடைய விருப்பம்.

தாமரைக்கனி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்டசபைதான் முடிவு செய்ய வேண்டும்.சட்டசபையில் உள்ள எதிர்கட்சி தலைவர்களை கலந்து பேசிய பிறகு மேலு ம் தண்டனையை நீடிக்கலாமா? அல்லதுவேண்டாமா? ஏற்கனவே அவர் அனுபவித்த இரண்டு நாள் தண்டனை போதுமா? என்பது பற்றி எல்லாம்எதிர்கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசி முடிவு எடுத்து அதன் பிறகு சபை முன்னவர் மூலம் தீர்மானமாக முன்மொழியப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+