இன்று மதியம் புயல் கரையைக் கடக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையின் மன்னார் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல், புதன்கிழமை பிற்பகல்தூததுக்குடிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 5.30 மணியளவில் புயல் மன்னார் வளைகுடாவில் மையம் கொண்டிருந்தது. வேகமாக அதுநகர்ந்து கொண்டுள்ளது. புயலின் தன்மை கடுமையாக இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் மணிக்கு 140 முதல்160 கிலோமீட்டர் அளவில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுவை மாநிலத்தின்காரைக்கால் ஆகிய நகரங்களில் புயலின் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் உள்ள முகுந்தராய சத்திரம் பகுதியில் வசிக்கும் 700 மீனவக் குடும்பங்கள் புயல் காரணமாகராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக வீசுகிறது.போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள்கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+