கடனைக் கட்டினார் க்ரோர்பதி
டெல்லி:
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பிரசார் பாரதிக்கு அவர் கொடுக்க வேண்டிய கடனில் ரூ 20.31 கோடியைதிரும்ப கட்டினார். மீதி பணத்தை வட்டியுடன் கட்டுவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
அமிதாப்பச்சன் பிரசார் பாரதிக்கு கட்ட வேண்டிய கடனில் ரூ 9,64,53,558 ரூபாய்கான காசோலையை பிராசார்பாரதியின் உயர் அதிகாரி பங்கு பெற்ற நிகழ்சசி ஒன்றில் அளித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனரும், நாடாளுமன்ற உறுப்பினருமானஅமர்சிங்கும் பங்கேற்றார். இதற்கு முன் அமிதாப்பச்சன் ரூ 50 லட்சம் கட்டியிருந்தார்.
அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 1995-ம் ஆண்டு அமிதாப்பச்சனால் துவங்கப்பட்டது. நஷ்டம்காரணமாக அந்த நிறுவனம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் நிறுவனம் துவஙக்கப்பட இருப்பதாகஅமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பி.ஐ.எஃப்.ஆர் நிறுவனம் இன்னமும் ஏ.பி.சி.எல்லை நஷ்டமடைந்தநிறுவனமாகவே அறிவித்துள்ளது. நான் கடனை திரும்ப கட்ட துவங்கிய பிறகு அந்த பட்டியிலிலிருந்துஏ.பி.சி.எல். பெயரை அவர்கள் நீக்க வேண்டும்.
மீண்டும் அரசியலில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் எனக்கு கிடையாது. ஏ.பி.சி.எல் குடும்பத்தின் உறுப்பினரானஅமர்சிங் என்னை உத்திரபிரதேச தேர்தலில் பிரசராம் செய்யுமாறு கேட்டுக் கொண்டால் என்னால் அதை மறுக்கமுடியாது. ஆனால் அவர் அவ்வாறு நிச்சயம் கேட்க மாட்டார் என்றார் அமிதாப்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications