மீனவர்களைக் கண்டுபிடிக்க வருகிறது கடற்படை
சென்னை:
கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 14 மீனவர்களை கண்டுபிடிக்க தமிழக அரசு கடற்படையின் உதவியை கோரியுள்ளது.
இது குறித்து தமிழக மின் வளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 22-ம் தேதி 6 மீனவர்கள் பாம்பன் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர். 5 மீனவர்கள் தூத்துக்குடியிலுள்ள தரீஸ்புரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். டிசம்பர் 26-ம் தேதி கன்னியாகுமரி புதூரிலிருந்து 3 மீனவர்களும் மூன்று தனி படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீன் பிடித்துவிட்டு மறுநாளே கரை திரும்ப வேண்டிய இவர்கள் வியாழக்கிழமை காலை வரை கரை திரும்பவில்லை. மீன்வளத்துறையின் உதவி டைரகடர் இதுகுறிதது தெரிவித்தவுடன் தமிழக அரசு இந்த மீனவர்களை கண்டு பிடிக்க உதவுமாறு கடற்படையை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள மீனவர்களும், காணாமல் போன மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் கண்டு பிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications