சென்னையில் 6 சீனர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுடன் சென்னை விமானநிலையத்துக்கு வந்திறங்கிய சீனாவைச் சேர்ந்த 6 பேர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் மாஜிஸ்ட்ரேட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த திங்கள்கிழமை சென்னை வந்தனர்.

பாங்காக்கிலிருந்து அவர்கள் சவுதி அரேபியா விமானம் மூலம் ஜெட்டா நகருக்கு வந்தனர். அங்கு அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களது பாஸ்போர்ட்டுக்கள், விசாக்கள் போலி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்பு அவர்கள் அங்கிருந்து சென்னை வந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவர்களை மீண்டும் பாங்காக்கிற்கே அனுப்பி வைத்தனர்.

ஆனால் தாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் வியாழக்கிழமை சென்னைக்கே அனுப்பி விட்டனர். தற்போது சென்னையில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+