For Daily Alerts
Just In
ஒரே நாளில் 10,000 கூட்டங்கள் .. பா.ஜ.க. திட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10,000 பொதுக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச்செயலாளர் இல.கணேசன்தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 10,000 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் 50 முதல் 500 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் கிளைகளில்8 முதல் 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
செயற்குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கட்டாயமாக இடம்பெறுவார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கிளைக் கூட்டங்கள் கிளை வாரியாக இந்தமாதம் 31 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கிளைத் தலைவர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]