For Daily Alerts
Just In
3 வயது குழந்தை கொலை ..பெண்ணுக்கு 33 ஆண்டு சிறை
பாங்காக் (தாய்லாந்து):
தனது தோழியின் 3 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்து ஈரப்படுத்தியதால் அக் குழந்தையைக் கொன்றபெண்ணுக்கு பாங்காக் நீதிமன்றத்தில் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
33 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அந்தப் பெண்ணின் பெயர் சசிடோர்ன் ஜாக்ஸ்மாய். வயது 25. சிறுவனைக்கொலை செய்த அந்தப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. சசிடோர்ன்குற்றத்தை ஒத்துக் கொண்டதால் அவருக்குத் தண்டனை 33 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
குற்றவாளி சசிடோர்ன் கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டார். இவர் தனது தோழியுடன் ஒரே பிளாட்டில் வசித்து வந்தார்.
Story first published: Friday, December 29, 2000, 5:30 [IST]