ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.
கேள்வி - பதில்
கே: தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாக நெடுமாறனை பேசஅனுமதிக்கும் தமிழக அரசு; அதைப் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கும் மத்திய அரசு - இரண்டில்தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியது எந்த அரசு?
ப: மாநில அரசு இம்மாதிரி விஷயங்களில் அக்கறை காட்டாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் மத்திய அரசின்பொறுப்புதான் மிக அதிகம்.
கே: புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சட்டம் தடுக்கும் எனக் கூறும் முதல்வர் கலைஞர், நெடுமாறனின் எந்த பேச்சையும் கண்டிக்காமலும்,மறுக்காமலும் மவுனம் சாதிப்பது எதனால்?
ப: முதல்வர் கூறியது இந்நாட்டு குடிமக்கள் பற்றி: நெடுமாறன் இந்திய தேசத்தின் குடிமகன் அலல: அவர் தமிழ் தேசத்தின் குடிமகன்: அவர் மீது நடவடிக்கைஎன்பது தமிழ் தேச அரசு உருவானால் தான் முடியும்.
கே: பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி - ஆகிய மூவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் - என்றுலத்தீஃப் சொல்கிறாரே?
ப: நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு ( ஊணூச்ட்டிணஞ் ணிஞூ இடச்ணூஞ்ஞுண்) செய்தால், அவர்கள் பதவி விலகுவதுதான் முறையாகஇருக்கும். அப்படி நடக்காத வரை, அவர்கள் பதவியில் தொடர்வதில் தவறில்லை.
கே: கடமையை செய்தவரை பாராட்டுவது சரியா?
ப: ஒருவன் தன் வேலையைச் செய்கிறான் - என்பதே அபூர்வமான செய்தியாகிவிட்ட காலத்தில், கடமையைச்செய்பவனுக்கு பாராட்டு கிட்டுவதில் வியப்பில்லை.
கே: வீரப்பன் பிரச்னை தி.மு.க., அரசுக்கு பலமா, பலவீனமா?
ப: தேர்தல் வருவதற்குள் மக்களுக்கு இந்த விஷயமே மறந்து போய்விடும் சாத்தியக்கூறு பலித்தால் இது பலமும்இல்லை, பலவீனமும் இல்லை என்று ஆகிவிடும்.
கே: தேர்தல் ஆணையம் ஒரு பெண்ணுக்கு முட்டாள் என்ற வார்த்தையைக் கொண்ட, அடையாளஅட்டையைக் கொடுத்திருப்பது பற்றி ... ?
ப: பின் என்ன? எல்லா வாக்களர்களுக்குமா அதே மாதிரி கொடுக்க முடியும்.? அது உண்மையைப்பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆனால் குழப்பம் வருமே!
கே: அழகிப் போட்டிகளைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?
ப: இவை நடப்பது பற்றி வியப்படைகிறேன்.
கே: கி.வீரமணி ஒரு ராஜகுரு, நான் அவரை அப்படித்தான் அழைப்பேன் - என்று மூப்பனார்கூறியுள்ளாரே?
ப: ரஸ்புடீன் ஞாபகம் வந்ததால், மூப்பனார் இப்படி பேசியிருக்கிறார் - என்று நினைக்கிறீர்களா? சே. சே. அப்படிஇருக்காது.
கே: வீரப்பனை பிடிக்கும் முயற்சியில், மத்திய அரசு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க முடியாதா?
ப: முடியும்: எடுக்க மறுக்கிறது. வீரப்பன் விஷயம் என்பது இப்போது விடுதலைப் புலி தொடர்புடைய, இருதீவிரவாத குழுக்கள் விஷயம் என்பதைப் பார்க்க மத்திய அரசு முன்வரவில்லை. இது மிகப் பெரிய தவறாகமுடியக்கூடும்.
கே: தமிழகமெங்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி,போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து .. ?
ப: அரசு தூதராக நெடுமாறன் நியமிக்கப்பட்டதற்கும், அவரை தமிழக அரசு பாராட்டியுள்ளதற்கும் எந்த பயனுமேஇல்லாமற் போகுமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications