ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.
கேள்வி - பதில்
கே: தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவாக நெடுமாறனை பேசஅனுமதிக்கும் தமிழக அரசு; அதைப் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கும் மத்திய அரசு - இரண்டில்தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியது எந்த அரசு?
ப: மாநில அரசு இம்மாதிரி விஷயங்களில் அக்கறை காட்டாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் மத்திய அரசின்பொறுப்புதான் மிக அதிகம்.
கே: புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சட்டம் தடுக்கும் எனக் கூறும் முதல்வர் கலைஞர், நெடுமாறனின் எந்த பேச்சையும் கண்டிக்காமலும்,மறுக்காமலும் மவுனம் சாதிப்பது எதனால்?
ப: முதல்வர் கூறியது இந்நாட்டு குடிமக்கள் பற்றி: நெடுமாறன் இந்திய தேசத்தின் குடிமகன் அலல: அவர் தமிழ் தேசத்தின் குடிமகன்: அவர் மீது நடவடிக்கைஎன்பது தமிழ் தேச அரசு உருவானால் தான் முடியும்.
கே: பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி - ஆகிய மூவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் - என்றுலத்தீஃப் சொல்கிறாரே?
ப: நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு ( ஊணூச்ட்டிணஞ் ணிஞூ இடச்ணூஞ்ஞுண்) செய்தால், அவர்கள் பதவி விலகுவதுதான் முறையாகஇருக்கும். அப்படி நடக்காத வரை, அவர்கள் பதவியில் தொடர்வதில் தவறில்லை.
கே: கடமையை செய்தவரை பாராட்டுவது சரியா?
ப: ஒருவன் தன் வேலையைச் செய்கிறான் - என்பதே அபூர்வமான செய்தியாகிவிட்ட காலத்தில், கடமையைச்செய்பவனுக்கு பாராட்டு கிட்டுவதில் வியப்பில்லை.
கே: வீரப்பன் பிரச்னை தி.மு.க., அரசுக்கு பலமா, பலவீனமா?
ப: தேர்தல் வருவதற்குள் மக்களுக்கு இந்த விஷயமே மறந்து போய்விடும் சாத்தியக்கூறு பலித்தால் இது பலமும்இல்லை, பலவீனமும் இல்லை என்று ஆகிவிடும்.
கே: தேர்தல் ஆணையம் ஒரு பெண்ணுக்கு முட்டாள் என்ற வார்த்தையைக் கொண்ட, அடையாளஅட்டையைக் கொடுத்திருப்பது பற்றி ... ?
ப: பின் என்ன? எல்லா வாக்களர்களுக்குமா அதே மாதிரி கொடுக்க முடியும்.? அது உண்மையைப்பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆனால் குழப்பம் வருமே!
கே: அழகிப் போட்டிகளைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?
ப: இவை நடப்பது பற்றி வியப்படைகிறேன்.
கே: கி.வீரமணி ஒரு ராஜகுரு, நான் அவரை அப்படித்தான் அழைப்பேன் - என்று மூப்பனார்கூறியுள்ளாரே?
ப: ரஸ்புடீன் ஞாபகம் வந்ததால், மூப்பனார் இப்படி பேசியிருக்கிறார் - என்று நினைக்கிறீர்களா? சே. சே. அப்படிஇருக்காது.
கே: வீரப்பனை பிடிக்கும் முயற்சியில், மத்திய அரசு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க முடியாதா?
ப: முடியும்: எடுக்க மறுக்கிறது. வீரப்பன் விஷயம் என்பது இப்போது விடுதலைப் புலி தொடர்புடைய, இருதீவிரவாத குழுக்கள் விஷயம் என்பதைப் பார்க்க மத்திய அரசு முன்வரவில்லை. இது மிகப் பெரிய தவறாகமுடியக்கூடும்.
கே: தமிழகமெங்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி,போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து .. ?
ப: அரசு தூதராக நெடுமாறன் நியமிக்கப்பட்டதற்கும், அவரை தமிழக அரசு பாராட்டியுள்ளதற்கும் எந்த பயனுமேஇல்லாமற் போகுமா?