தேர்வில் காப்பி .. தூக்கில் தொங்கினார் மாணவர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரையாண்டுத் தேர்வில் காப்பியடித்த மாணவரை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் பள்ளிவளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப் போட்டு இறந்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 10 நாட்களாக அரையாண்டுத் தேர்வு நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியிலும்அரையாண்டுத் தேர்வு நடந்தது.
அரசு பள்ளியில் அறிவியல் தேர்வு நடந்து கொண்டிருந்த போது கார்த்திக் (15) என்ற மாணவர் காப்பி அடித்தார். அவர் 9 ம் வகுப்புப் படித்து வந்தார். இவர்காப்பி அடிப்பதைப் பார்த்த ஆசிரியர் இவரைக் கண்டித்தார்.
பிற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரால் அவமானப்பட்டு விட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இவர் பள்ளி வளாகத்திலுள்ள வேப்பமரத்தில்தூக்குப் போட்டு கொண்டு இறந்தார்.












Click it and Unblock the Notifications