For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ரித்திக் வன்முறைக்கு ஐ.எஸ்.ஐ காரணம்

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்:

இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் விவகாரத்தில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளுக்குப் பின்னணியில்பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன்கூறியுள்ளார்.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வதந்தியின் அடிப்படையில்நேபாளத்தில் வன்முறை மூண்டிருப்பது வருத்தம் தருகிறது. இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதுகண்டிக்கத்தக்கது.

ஐ.எஸ்.ஐ. அமைப்பின் நடவடிக்கைகளுக்கு தளமாக நேபாளம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தற்போதுமூண்டுள்ள இந்திய எதிர்ப்பு கலவரத்தின் பின்னணியிலும் ஐ.எஸ்.ஐ.யே இருக்கிறது.

இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நேபாள அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றார் அவர்.

நடிகர் ரித்திக் ரோஷன் தனியார் டிவி ஒன்றில் அளித்த பேட்டியில், நேபாளம் மற்றும் நேபாளிகள் குறித்துத் தவறாககூறியதாக எழுந்த செய்தியையடுத்து தலைநகர் காத்மாண்டு மற்றும் பிற பகுதிகளில் வன்முறை மூண்டதுநினைவிருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X