For Daily Alerts
Just In
ரூ. 1 கோடி ஹெராயின் பறிமுதல்.. 2 பேர் கைது
சென்னை:
சென்னை போதைப் பொருட்கள் தடுப்புப் போலீஸார், சர்வதேச சந்தையில் ரூ. 1 கோடி பெறுமானமுள்ள ஒருகிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர்ராஜாங்கம் (32), ராஜூ (28). சென்னை திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வருடம் மட்டும் போதைத் தடுப்புப் போலீஸார் ரூ 42.67 கோடி பெறுமானமுள்ள 42.674 கிலோஹெராயினைப் பறிமுதல் செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
Story first published: Monday, December 25, 2000, 5:30 [IST]