For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஸ் கசிவால் தீவிபத்து .. 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்:

கேஸ் சிலிண்டரை மூட மறந்து விட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் கீவாளுர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜூ (48). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு கவிதா, சுதா என்ற இருமகள்களும், பிரபாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை டீ போடுவதற்காக ராஜூ கேஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். சிலிண்டர் ஏற்கனவே மூடப்படாமல் இருந்ததால் காஸ்பரவி இருந்தது. ராஜூ தீ பற்ற வைத்ததும் தீப்பிடித்து எரிந்தது.

தீயின் வெப்பம் தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு மனைவி ராஜேஸ்வரி, மகள் சுதா ஆகியோர் ஓடி வந்தனர். அவர்கள் மீதும்தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வழியில் கணவனும், மனைவியும் இறந்தனர். சுதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாகபோலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X