பழனி மலையில் உ.பி. சிறுவன் சாவு
பழனி:
பழனி மலையிலிருந்து விழுந்து உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் இறந்துபோனான். இதனால் அவன் கலந்து கொள்ள வந்த யோகசனப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
பழனியில் அகில இந்திய அளவில் யோகாசனப் போட்டி நடந்து வருகிறது. இந்தபோட்டியில் கலந்து கொள்ள 17 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.
இந்த மாணவர்கள் முருகன் வீற்றிருக்கும் குன்றிற்கு அருகில் இடும்பன் மலைக்குச்செல்ல நினைத்தனர். அங்கு சென்று மலை ஏறிக் கொண்டிருந்தனர். அப்போதுஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோஸ்குமார் சிங் (14) என்ற மாாணவரும் சென்றார்.இவர்களின் மாஸ்டர் வர்மா தலைமை வகித்துச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரோஸ்குமார் கால்தவறி விழுந்து படிகளில்உருண்டார். மாணவனைத் தடுக்க இயலாமல், படிக்கட்டில் காயத்துடன் அவனை மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.
இதையடுத்து ஒரு வார காலமாக நடந்து வந்த யோகாசனப் போட்டியின் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications