நாட்டுத் துப்பாக்கியுடன் த.மா.கா.தொண்டர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வில்லிவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிக் கொண்டிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரைப்போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வில்லிவாக்கம் பகுதியில் சிலர் நள்ளிரவு 12 மணிக்கு 2001 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்.
போலீஸார் அங்கு சென்றதும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பலர் ஓடி விட்டனர். ஆனால் நின்று கொண்டிருந்த ஒருவர் மட்டும் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர் என்று தெரிய வந்தது. அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள்குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications