பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது
கோவை:
அரசு போக்கு வரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் பெட்ரோல் வெடி குண்டு வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மசூதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் மசூதி ஒன்றும்சேதமடைந்தது.
இந்த சம்பவங்களுக்கு பழி வாங்கும் விதமாக கோயம்புத்தூரில் அல் - உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் அரசு போக்குவரத்துக் கழகடெப்போவிற்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒருவர் வெள்ளிக்கிழமை போலீசில் சரணடைந்தார். இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கும்படி கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.