கள்ளச்சாராயம் கடத்திய 2 பேர் கைது
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ 1.5 லட்சம் பெறுமானமுள்ள 1,200 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கடத்திக் கொண்டு சென்ற கும்பலைப்போலீஸார் காஞ்சிபுரம் அருகே மடக்கிப் பிடித்தனர்.
இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி போலீஸார் நின்று கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் மிக வேகமாகச் சென்றது.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த லாரியை தனது ஜீப்பில் பின்தொடர்ந்தார்.
பின்னர் திருப்பம் ஒன்றின் அருகே லாரிக்கு முன்பாக தனது ஜீப்பைக் கொண்டு நிறுத்தினார் இன்ஸ்பெக்டர். பின்னர் லாரி டிரைவரையும், இன்னொருவரையும் கைதுசெய்தனர். அவர்கள் பெங்களூருக்குக் கடத்திக் கொண்டிருந்த ரூ 1.5 லட்சம் பெறுமானமுள்ள சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்துவிசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications