முரசொலி அறக்கட்டளை விருது அறிவிப்பு
சென்னை:
இந்த ஆண்டிற்கான முரசொலி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலச்சந்தருக்கும் வைரமுத்துவுக்கும், டத்தோ சாமிவேலுக்கும் விருதுகள்வழங்கப்படுகின்றன.
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.
இதன்படி 2000 மாவது ஆண்டுக்கான முரசொலி அறக்கட்டளை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அறக்கட்டளை தலைவர் ஆர்.கணேசன்தெரிவித்துள்ளதாவது:
2000 மாவது ஆண்டுக்கான முரசொலி அறக்கட்டளை விருதுகள் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ சாமி வேலுக்கும், திரைப்பட இயக்குநர்பாலச்சந்தருக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை முதல்வர் இம்மாதம் 27-ம் தேதி சென்னையில் நடைபெறும்விழாவில் வழங்குவார் என தெரிவித்தார். இந்த விருதுடன் ரூ 1லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications