பாபர் மசூதி இடிப்பு: ஆதாரங்களை வெளியிடுவேன்...ஜோதி பாசு
கொல்கத்தா:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அதைவெளியிடுவேன் என்று மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. அது தானாகவே இடிந்து விழுந்திருக்கும். பாபர் மசூதி இடிப்பில் நாச வேலைகள் எதுவும்நடக்கவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினார்.
ஆனால் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், பாபர் மசூதியை இடிப்பதற்கு ஆட்களை நியமித்தால் கூட அதற்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகும்.அவ்வளவு பழமை வாய்ந்த கட்டிடம். ஆனால் கரசேவகர்கள் 5 மணிநேரத்தில் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள் என்று பேசியதுகேஸட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கேஸட் என்னிடம் உள்ளது.
இதே போல் அரசு உயர் அதிகாரி ஒருவர், அயோத்தியில் பாபர் மசூதி முக்கியத்துவம் இல்லாத ஒன்று. அந்த இடத்தை முஸ்லீம்கள் இந்துக்களிடம்கொடுத்து விடலாம் என்று பேசியதும் கேஸட் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியப் பதவியில் இருப்பவர்கள் இதுமாதிரியானபேச்சுக்களிலோ, விவாதங்களிலோ, செயல்களிலோ ஈடுபடக் கூடாது. தேவைப்பட்டால் இந்தக் கேஸட்டை வெளியிடுவேன் என்று கூறினார் ஜோதிபாசு.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications