For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாராபுரத்தில் கோஷ்டி மோதல்

By Staff
Google Oneindia Tamil News

தாராபுரம்:

தாராபுரம் அருகே திடீர் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணித் தலைவர்தாக்கப்பட்டார். இது தொடர்பாகப் போலீஸா ர் 8 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தாராபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகஇருவர் கைது செய்யப்பட்ட பின்னர் பதட்டம் தணிந்தது.

இந்த நிலையில், மீண்டும் இப்போது பதட்டம் ஏற்பட்டது. தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில், ஹக்கீம் (19) என்பவர் புத்தாண்டு வாழ்த்தைரோட்டில் எழுதியுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (22) பதிலுக்கு அவரும் புத்தாண்டு வாழ்த்து எழுதியுள்ளார். இதனால்இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சரவணகுமார், அறிவரசன், ரமேஷ், சக்தி ஆகியோர் சேர்ந்து ஹக்கீமை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து ஹக்கீக்கு ஆதரவாக முகமது ஹனீபா,ராஜாமுகமது, அன்சார் ஆகியோர் வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஈரோடு மாவட்ட இந்து முன்னணித் தலைவர் ராஜேந்திரன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காளிபாளையம்வந்துள்ளார். அவரை ஒரு கோஷ்டியினர் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X