தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டு
சென்னை:
2000 மாவது ஆண்டின் சிறந்த தமிழக தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடந்தது.
பாராட்டு விழாவை தமிழக அமெச்சூர் கிளப் தடகள சங்கத்தினர் ஏற்று நடத்தினர். சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்ற ராஜேந்திரன், ராஜீவ், திருஞானதுரை, ஜெயலட்சுமி, மற்றும் சங்கீதா, தாரணி, சுபா, கிருஷ்ணப்பிரியா ஆகியோர் சிறந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளாகத் தேர்வுபெற்றனர். இவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமச்சந்திரன் பாங்காங்கில் நடந்த ஆசியப் போட்டி, ஒசார்தாவில் நடந்த ஆசிய தடகள போட்டி ஆகியவற்றில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர்.
ராஜீவ் முன்னணி தடகள வீரர்களில் ஒருவர். ஜெயலட்சுமி மணிப்பூரில் நடந்த தேசிய போட்டியில் 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றைப்பெற்றவர். இதே போல் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிற வீரர்களும் பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications