ஒரிசாவில் 5 குழந்தைகள் தீயில் கருகிச் சாவு
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசித்து வரும் குடிசைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டத்தில் 5 குழந்தைகள் தீயில்கருகி இறந்தனர்.
தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானுஸ்தியா என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு இந்தச்சம்பவம் நடந்தது.
இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் இறந்த 5 குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இறந்த 5 குழந்தைகளில் 3 பேர் ஆண் குழந்தைகள்.2 பேர் பெண் குழந்தைகள். அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் எதுவும்தெரியவில்லை.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. குளிரைத் தாங்க முடியாமல் பக்கத்து குடிசைகளில் வாழ்பவர்கள் தீ மூட்டியதில் தீபரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications