எனது மகனை புதுவை முதல்வராக்கும் எண்ணம் இல்லை: ராமதாஸ்
புதுவை:
என் மகன் அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வரும் எண்ணமோ அல்லது புதுவை முதல்வராக்கும்எண்ணமோ இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் புதுவையில் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் உள்ள மண்ணடிப்பேட்டை தொகுதியில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், சில தினங்களுக்கு சில பத்திரிக்கைகளில் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை புதுவைமுதல்வராக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அது முழுவதும் தவறானதகவல். என்னிடம் அப்படிப்பட்ட எண்ணங்கள் எதுவும் கிடையாது.
புதுவையில் என் மகனுக்கு வாக்குரிமையே இல்லை எனும் போது எப்படி அன்புமணியை நான் புதுவைமுதல்வராக்க முடியும்? இது வெறும் வதந்தியே.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை உடனடியாக வழங்கநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.