For Quick Alerts
For Daily Alerts
Just In
குடும்பப் பிரச்சனையில் சகோதரிகள் தற்கொலை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்த சகோதரிகள் இரண்டு பேர் குடும்ப பிரச்சனைகாரணமாக, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
இத்தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் பெயர் சந்தியா(17), சத்யா (13). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களது தந்தையும், தாயும் கடந்த ஒரு வருடமாகதனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தாயையும், தந்தையையும் ஒன்று சேர்த்து வைக்க சகோதரிகள் இருவரும் எடுத்த முயற்சிகள் அனைத்தும்தோல்வியடைந்தன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் இருவரும் தங்கள் வீட்டருகில் இருந்தகிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றனர்.
போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 3, 2001, 5:30 [IST]