இலங்கையில் 3 மாதத்தில் 777 புலிகள், 268 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையில்கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 1045 பேர் இறந்துள்ளனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே இதுகுறித்துக் கூறுகையில், யாழப்பாணம் பகுதியில்விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த மோதலில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் புலிகள் தரப்பில் 777 பேரும், ராணுவ வீரர்கள் தரப்பில் 268பேரும் பலியாகியுள்ளார்கள். விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் ரவிகிரணா என்ற பகுதியைமீட்டுள்ளனர். அந்தப் பகுதி 139 கிலோமீட்டர் சதுர கிலோமீட்டர் கொண்டதாகும்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் விடுதலைப்புலிகள், நன்கு போரிடும் திறமைவாய்ந்தபலரை பறி கொடுத்துள்ளனர். குறிப்பாக, புலிகள் தரப்பில் இரும்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு விட்டனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள நாவக்கூலி என்ற இடத்தில் இறந்து கிடந்த 8 பேரது சடலங்களை ராணுவவீரர்கள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் 6 பேர் பெண் புலிகள் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications