குற்றாலத்தில் அடை மழை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலத்தில் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கழுகுமலை ஆகிய ஊர்களில் கடந்த 28 ம் தேதி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது.
பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சைத் தாண்டி தண்ணீர் விழுந்ததால் ஐயப்ப பக்தர்களும்,பொதுமக்களும் அருவியும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் அருவி ஓடையில் குளித்தார்கள்.
அருவி வெள்ளம் சிற்றாற்றில் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டாரத்திலும் வழி நெடுக உள்ள ஊர்களில் பெய்த மழைவெள்ளம் ஆற்றில் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நெல்லை மாவட்டம் முழுவதும் திடீர் என மழை பெய்தது.












Click it and Unblock the Notifications