For Daily Alerts
Just In
புலி ரத்த பூஜையில் அரசியல்வாதிக்குத் தொடர்பு
சென்னை:
ஹைதராபாத்தில் புலி ரத்தத்தை வைத்து அரசியல்வாதி ஒருவர் பூஜை நடத்தியது உண்மை என்று வனவிலங்கு வாரியத் தலைவர் குமன்மால்லோடா கூறியுள்ளார்.
இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குமன்மால்லோடா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பெண்புலி ஒன்று கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டது ஒரு கொடுமையான செயலாகும். இந்தக்குற்றத்தைச் செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
புலி கொல்லப்பட்டது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. இதில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்புள்ளது. அவர் பெயரை தற்போதுவெளியிட முடியாது. ஒரு தனி மனிதனின் நலனுக்காக புலி கொல்லப்பட்டது. புலி ரத்த பூஜை தனிப்பட்ட மனிதர் ஒருவரின் நலனுக்கு செய்யப்பட்டது உண்மைதான்என்றார் அவர்.
Comments
Story first published: Thursday, January 4, 2001, 5:30 [IST]