For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி இலக்கு ரூ கோடி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதிக்கு ரூ. 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளோம் இதில் 50 கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டு விட்டது என மாநிலகைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பேசியதாவது:

தமிழக அரசு கைத்தறி துணி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலத்தின்போது கைத்தறி துணிகள் தேங்கிக் கிடந்தன.

இந்த ஆட்சி வந்த பிறகு தான் கைத்தறித் துணிகளை அரசே ஏற்றுமதி செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய்க்குஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டில் நூறு கோடி ரூபாயக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டு 50 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது.

கைத்தறி துணிகளின் உற்பத்தியில் சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி ஆகிய ஊர்களில் தரத்தை உயர்த்தியுள்ளோம். இந்த தர மேம்பாடு காரணமாகஏற்றுமதி எளிதாகிறது. இந்த மாவட்டங்களில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதிய டிசைன்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டிசைன்களில் உற்பத்தியாகும் துணி ரகங்களை அரசே எடுத்து ஏற்றுமதிக்கும் ஏற்பாடுசெய்கிறது. அடையாறில் உள்ள கலாஷேத்ரா அமைப்பு புதிய டிசைன்க ள உருவாக்கித் தருகிறது.

இந்த வகை புதிய டிசைன்களுக்கு 30 சதவீத தள்ளுபடி அளிப்பதால் விற்பனையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 1200 நெசவுத் தொழில் கூடங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நாடு முழுவதிலும் 300 கோ ஆப்டெக்ஸ்விற்பனை நிலையங்களும் இருக்கின்றன என்றார் பெரியசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X