காதி ஊழல்: வெள்ளை அறிக்கை கேட்கிறது கம்யூனிஸ்ட்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியினர் காதி கிராமோத் பவன் ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை அளிக்குமாறுமுதலவர் சண்முகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகன் கூறியதாவது:
காதி கிராமோத் பவனில் அதிக அளவில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் முன்னரே முதல்வரிடம் கூறியுள்ளோம்.ஆனால் இது குறித்து முதல்வர் சரியான பதில் அளிக்கவில்லை.
தற்போது காதி கிராமோத் பவனில் 354 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 88 பேர் பதவி நீக்கம் பட்ட முன்னாள்பொதுப்பணி அமைச்சர் கண்ணனால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள்.
1999-2000-ம் ஆண்டு இந்த போர்டுக்கு தேன் தயாரிப்புக்காக ரூ 2.45 லட்சம் அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால்இந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
சாராய உரிமம் குறிப்பிட்ட சில நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துகண்ணன் தேவையான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications