அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்: இலங்கை பிஷப்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றால் உடனடியாகஇலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மூன்றாவது நாடுகளின் உதவியுடன்பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று இலங்கை பிஷப் மேல்கோம் ரஞ்சித்தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் கொழும்பில் மேல்கோம் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடந்து வரும் இனப் பிரச்சனையால் தினந்தோறும் ஏராளமானஉயிர்ப்பலிகள் நடந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளும்இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

புலிகள் அறிவித்த சண்டைநிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். புலிகள் கூறுவதுபோல் சண்டைநடந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை என்பதுசாத்தியமில்லாத ஒன்று. அதனால் புலிகளின் சண்டைநிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்கமுன் வர வேண்டும்.

நார்வே நாட்டின் சமரச முயற்சியைத் துணையாகக் கொண்டு, விடுதலைப்புலிகளும்,இலங்கை அரசும் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வர வேண்டும்.

இலங்கையில் உயர் அதிகாரிகள், சமூக சேவகர்கள் அடங்கிய அமைதி விரும்பும்குழுவினர், ஒன்றிணைந்து இலங்கை அரசிடமும், விடுதலைப் புலிகளிடமும்விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+