ஜஇந்தியாவை சூப்பர் பவராக்குங்கள்: வாஜ்பாய் வேண்டுகோள்
டெல்லி:
இந்தியாவை அறிவின் சூப்பர் பவராக மாற்ற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முன் வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் சனிக்கிழமை துவங்கிய வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சர்வதேச 6-வது மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் வாஜ்பாய் மற்றும்மொரீஷியஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் அனில் குமார் சிங் கயான் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் 25 நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர்பேசியதாவது:
உலக அரங்கில் இந்தியர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே 2010-ம் ஆண்டிற்குள் இந்தியாவை அறிவின் சூப்பர் பவராக்கவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முன்வர வேண்டும்.
பிஜியில் ஆட்சி நடத்தி வந்த இந்தியா வம்சாவளியைச் சேரந்த மகேந்திர சவுத்ரியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அங்கு வாழ்ந்து வந்த இந்தியா வம்சாவளியைச்சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டதை கண்டு நாம் வருந்தினோம். அந் நாட்டில் 1997-ம் ஆண்டின் அரசியில் அமைப்புச் சட்டம் பின்பற்றப்பட வேண்டும் எனவற்புறுத்தி வருகிறோம்.
இந்தியா தகவல் தொழில் நுட்பம் மற்றும் விண்வெளி தொழில் நுட்பம் போன்றவற்றில் முன்னேற்றம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஐ.ஐ.டி.மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுபவர்கள் அயல் நாடுகளில் பணி புரியச் செல்கிறார்கள்.
அவர்கள் தாய் நாட்டிற்காகவும் பாடுபட வேண்டும். அதற்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் முன்னேற்றம் சமுதாயமாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்களின் பிரச்னைகளை தீர்க்க எல்.எம். சிங்வி தலைமையில் உயர் மட்ட கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications