தொலைக்காட்சியில் சதாம் உசேன் உரை
பாக்தாத்:
ஈராக்கில் ராணுவத்தின் 80 வது ஆண்டு விழாவையொட்டி, அதிபர் சதாம் உசேன் தொலைக்காட்சியில் பேசுகிறார்.
சதாம் உசேனுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இது எதிர்க்கட்சியினர் கிளப்பி விட்ட புரளி என்று ஈராக் அரசுஅதிகாரிகள் மறுத்தனர்.
இந்த நிலையில் ஈராக் ராணுவத்தின் 80 வது ஆண்டு விழாவையொட்டி சதாம் உசேன் தொலைக்காட்சியில் தோன்றி பேசுகிறார்.
உலகிலேயே கவுரவமான ஈராக் மக்களுக்காகவும், துணிச்சல் மிக்க ராணுவத்துக்காகவும் சரித்திரச் சிறப்பு வாய்ந்த உரையை சதாம் உசேன்நிகழ்த்துகிறார் என்று ஈராக் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
அவரது பேச்சு ரேடியோவிலும் ஒளிபரப்பாகும். இன்டர்நெட்டிலும் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக எகிப்து நாட்டு நடிகர்களை வரவேற்றுப் பேசுகையில் சதாம் உசேன் மிக ஆரோக்கியமாகக் காட்சியளித்தார். மேலும் வளைகுடா யுத்தத்துக்குப்பிறகு கடந்து ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு சதாம் உசேன் தலைமையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications