அரசியல் பின்னணியும், அயோத்தி விவகாரமும்
சென்னை:
அரசியல் பின்னணி இருக்கும் வரை அயோத்தி விவகாரத்திற்கு தீர்வு காண இயலாது என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கருத்துதெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அலகபாத்தில் வரும் 13 ம் தேதி நடக்கும் கும்ப மேளாவில் நான் கலந்து கொள்கிறேன். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் உலகில் உள்ள அனைத்து புண்ணியதீர்த்தங்களும் கலக்கின்றன என்பது ஐதீகம். மேலும் பிப்ரவரி 5 ம் தேதி நடக்கும் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்ளஇருக்கிறேன்.
அயோத்தி பிரச்சனை தீர அரசியலில் இல்லாத இந்து - முஸ்லீம் பெரியவர்கள் ஒன்று கூடி பேச வேண்டும். அயோத்தி விவகாரத்தில் அரசியல் பின்னணிஇருக்கும் வரை இதற்குத் தீர்வு காண முடியாது. கோர்ட் தீர்ப்பு வந்தால் கூட இப்பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இயலாது.
தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என்று கூறுவதெல்லாம் ஓட்டுக்காகக் கூறப்படுவதாகும்.
காஞ்சிபுரம் அடுத்த பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிமடத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் காஞ்சி விஞ்ஞான் டிரஸ்ட் சார்பில் கம்ப்யூட்டர்சென்டர் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் உள்ள டைடல் பார்க் போன்று அனைத்து வசதிகளுடனும் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications