சப் - இன்ஸ்பெக்டர் தேர்வு நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகளை அடுத்து பாண்டிச்சேரியில் தற்காலிகமாக சப்-இன்ஸ்பெக்டர்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாண்டிச்சேரியில் தற்போது சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சில பத்திரிக்கைகளில்செய்திகள் வெளிவந்தன.

இதையடுத்து தற்போது டெல்லியில் உள்ள பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், அங்கிருந்து பாண்டிச்சேரி முதன்மை செயலாளரை தொடர்பு கொண்டு சப் - இன்ஸ்பெக்டர்தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+