காவல் நிலையங்களில் கைதிகள் சாவு குறைகிறது
கோவை:
மனித உரிமைப் பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த ஆண்டுகளில் காவல்நிலையங்களில் கைதிகளின் சாவுகணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது என தமிழக மனித உரிமைகள் மையம் மற்றும் சமூக நீதிக்கானகாவல்துறை ஐ.ஜி சியாம் சுந்தர் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளில் மனித உரிமை மற்றும் காவல்நிலையங்களில் கைதிகளைத் துன்புறுத்தும் நிலைமாற்றப்பட்டு வருகிறது. கைதிகளை அடித்து துன்புறுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுரை கூறப்பட்டுவருகிறது. அதோடு சித்ரவதையில் இறங்கும் போலீசார் மீது துறை வாரியான நடவடிக்கை மட்டுமின்றி, கிரிமினல்வழக்கும் தொடரப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலைய கைதிகளின் சாவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 96ம் ஆண்டு சராசரியாக 16 பேர் காவல்நிலையங்களில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு இறந்துள்ளனர். 97ம் ஆண்டில் இது 12 ஆக குறைந்தது. 98ம் ஆண்ட 8 ஆகவும், 2000ம் ஆண்டில் இரண்டாகவும் இந்த சாவுகளின்எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதே போன்று அரசு பிரிவில் ஏற்படும் மனித உரிமை மீறல்களை இலாகாபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம், தஞ்சாவூர் உட்பட 7 இடங்களில் இதற்கென டி.எஸ்.பி., க்கள்நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காவல் துறையில் இருக்கும் இந்த சித்ரவதையைக்கண்காணிப்பு பணி மட்டுமல்லாது, சமுதாயத்தில் நடக்கும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் தீண்டாமை பற்றியும், போலிச்சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதையும் இந்த குழு கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
கடந்த பல ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இக் குழு விசாரணை நடவடிக்கை மேற்கொண்டது.இதனால், இதுவரை ஒன்றரை கோடி ரூபாய் நிவராணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஐ.ஜி. சியாம் சுந்தர்.