துபாய் அரசு விழாவில் பங்கேற்கிறார் நாயுடு

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாய் அரசு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அங்கு நடக்கும் தேசிய விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.

இந்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகள் விழாவில் கலந்து கொள்வது வெகு அரிதாக நடக்கக் கூடியநிகழ்ச்சியாகும்.

இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் செல்கிறார். மேலும் அங்கு நடக்கும் தேசிய விழாவில் கலந்து கொண்டுதுபாய் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யும் வகையில் பேசுவார்.

ஹைதராபாத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முன்னணியில் கொண்டு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து துபாய் அதிகாரிகள்,அலுவலர்கள் மிகவும் வியந்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப புரட்சியையே அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள் என்று அவர்கள் வியக்கிறார்கள்.

இதுகுறித்து துபாயிலுள்ள இந்திய தூதர் அசோக் முகர்ஜி கூறுகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துபாயில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கானபொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் நடக்கும் தேசிய விழாவில் முதன்மை உரையை ஆற்றுவார்.

கடந்த வருடம் துபாய் அதிகாரிகள் உயர் மட்டக் குழு ஒன்றை ஹைதராபாத்துக்கு அனுப்பி எந்தெந்த விஷயங்களில் இரண்டு நாடுகளும் இணைந்துசெயல்படலாம் என்று ஆராய்ந்து வருமாறு கூறியிருந்தது. அந்தக் குழு, ஆந்திர முதல்வர் சந்திர பாபுவை சந்தித்துப் பேசியது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுகடந்த வருடம் மார்ச் மாதம் துபாய் வந்தார். தற்போது துபாய் அரசு நடத்தும் தேசிய விழாவில் சந்திரபாபு நாயுடுவை பேச அழைத்திருக்கிறது.

துபாய் செல்லும் நாயுடு, ஆந்திர நிதியமைச்சர் மற்றும் தொழிலதிபர்களையும் அழைத்துச் செல்வார். ஐக்கிய அரபு நாடுகளில் அவர், முக்கிய அரசியல்தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+