இந்தியா வருகிறார் ஜெர்மனி நிதியமைச்சர்
டெல்லி:
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில் ஜெர்மனி நிதியமைச்சர் ஹான்ஸ் எகேல் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எகைல் இந்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்துப் பேசுவார். முதலீடுகள் தளர்த்தும் துறை அமைச்சர் அருண் செளரி மற்றும் தொழில் துறைஅமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார்.
மேலும் முன்னாள் நிதியமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான மன்மோகனையும் அவர் சந்தித்து பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநடத்துவார்.
இந்தியா - ஜெர்மனி நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் எகைல் இந்தியவில் உள்ள ஜெர்மன் நிறுவன அதிபர்களையும்சந்தித்து தகவல்கள் பரிமாறிக் கொள்வார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications