மதுரை துணை மேயர் மனு தள்ளுபடி
சென்னை:
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றக்கோரி மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
மதுரையில் அக்டோபர் மாதம் நிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் சம்பந்தமுடைய குற்றவாளிவரிச்சையூர் செல்வம் போலீசில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் ஜெகதீசன் கொலை வழக்கில் மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுக்கும்தொடர்புள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் மிசா பாண்டியன் தலைமறைவாகிவிட்டார். அவர் சார்பில் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீண்டும் மிசா பாண்டியன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்தவழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற வேண்டும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் புகார் கூறப்பட்ட வழக்கு என்று மனுவில்குறிப்பிட்டிருந்தார் மிசா பாண்டியன்.
மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications