வீரப்பனுக்கு சீருடை தைத்துக் கொடுத்தவர் கைது
கோவை:
சத்யமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக பச்சை நிற யூனிபார்ம் தைத்துக் கொடுத்துவந்த டெய்லர் உள்பட 10 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படைப் போலீஸாரும், எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸாரும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வீரப்பனுக்குஉணவு, உடை என்று வழங்க பல வழிகளில் உதவி வரும் ஆதரவாளர்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையின் இந்த வேட்டையில், வீரப்பனுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் பல ஆண்டுகளாக யூனிபார்ம் தைத்துக் கொடுத்து வந்த டெய்லர்பிடிபட்டார்.
டெய்லர் உள்பட வீரப்பனுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்து வந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சத்யமங்கலம் - அந்தியூர்காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications