For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் கமிஷனர் மீது புதிய தமிழகம் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கட்சிப் பணம் ரூ 2 லட்சத்தையும் திருடிக்கொண்டதற்குப் பின்னணியில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் காளிமுத்து இருக்கிறார் என்று புதிய தமிழகம்கட்சியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஜனவரி 6 ம் தேதி புதிய தமிழகம் கட்சி அலவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து நாங்கள் போலீசில்புகார் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்துவுக்கு திருடப்பட்ட பொருட்களும், பணமும் எங்குவைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியும். ஆனால் அவர் அதுகுறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறிவருகிறார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும், பொருட்களையும் போலீஸார் இதுவரை மீட்கவில்லை.

இந்தப் பணத்தை கமிஷனர் காளிமுத்து மீட்டுத்தரவில்லையென்றால் அவர் தனது சம்பளத்திலிருந்து பணத்தைக்கொடுக்க வேண்டும். நான் விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து அவரிடம் இதுகுறித்துக்கூறவுள்ளேன்.

சென்னையில் போலீஸ் கமிஷனர் காளிமுத்துவை ஆதரித்தும், என்னை எதிர்த்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.இவ்விஷயத்தை புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றார் கிருஷ்ணசாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X