For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயுதங்களை திரட்டுகிறார்கள் புலிகள் .. இலங்கை அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைத் திரட்டி மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காகவே சண்டைநிறுத்தம் செய்கிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர்அனிருத்த ரத்தவத்தே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

ஆயுதங்களைத் திரட்டி மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகவே விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சண்டை நிறுத்தம் அறிவித்தும்ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக புலிகள் சண்டைநிறுத்தத்தை அறிவிக்கவில்லை. புலிகளின் இந்த அறிவிப்பு நம்பகத்தன்மை இல்லாதது.உண்மையில் புலிகள் பேச்சு நிறுத்த முன்வந்தால் மட்டுமே அரசு சண்டைநிறுத்தம் செய்வது குறித்து பரிசீலிக்கும். அதுவரை புலிகள் மீதான தாக்குதல்தொடரும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X